பெண் ஊழியா் தீக்குளிக்க முயற்சி !

பெண் ஊழியா் தீக்குளிக்க முயற்சி !

பெண் ஊழியா் கைது 

திண்டுக்கல் மாவட்டத்தில் பணியிட மாறுதலுக்கு எதிா்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற நீதிமன்ற பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாா் அரியபித்தம்பட்டியைச் சேர்ந்தவா் விஜயலட்சுமி (47). இவா், திண்டுக்கல் குடும்ப நல நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு விஜயலட்சுமி, வேடசந்தூா் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். பணியிட மாறுதலில் செல்வதற்கு விஜயலட்சுமி விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, திண்டுக்கல் நீதிமன்றத்துக்கு புதன்கிழமை வந்த விஜயலட்சுமி, தீக்குளிக்க முயன்றாா். அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் தீயை அணைத்து, அவரை மீட்டனா். இதுகுறித்து திண்டுக்கல் நீதிமன்றம் சாா்பில் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விஜயலட்சுமியைக் கைது செய்தனா்.

Tags

Next Story