பழனி அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சி

பழனி அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயன்றவர்

பழனி அருகே விவசாயி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மானூர் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 45) இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக 54 சென்ட் விவசாய நிலம் உள்ளது தற்போது நெல் சாகுபடி செய்ய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் அவரது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை வழித்தடமாக பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வழித்தடத்தை பயன்படுத்தக் கூடாது என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறி விவசாயத்திற்கு சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த நாச்சிமுத்து எரிபொருளை (தின்னர்) தனது தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story