விருதுநகரில் நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதிய விபத்து: 4பேர் காயம்

விருதுநகரில் நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதிய விபத்து: 4பேர் காயம்
காவல் நிலையம்
விருதுநகர் ரயில்வே பீட்டர் சாலையில் நடந்து சென்றவர் மீது ஆட்டோ மோதிய விபத்தில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.

மதுரை மாவட்டம் கே புதூர் பகுதியைச் சார்ந்தவர் விக்னேஸ்வரன் வயது 26 இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது இவர் கடந்த 24 ஆம் தேதி காலை தன்னுடன் பணிபுரியும் கார்த்திக் என்பவர் உடன் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி ரயில்வே ஸ்டேஷன் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது மாடசாமி என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் நடந்து வந்த விக்னேஸ்வரன் மற்றும் அவருடன் நண்பரான கார்த்திக் இருவருமே காயமடைந்தனர் மேலும் ஆட்டோவில் பயணம் செய்த பார்வதி மற்றும் சூர்யா ஆகிய இருவர் என மொத்தம் நான்கு நபர்கள் காயமடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Read MoreRead Less
Next Story