வெள்ளியணை அருகே சரக்கு வாகனம் மோதி விபத்து: முதியவர் படுகாயம்

வெள்ளியணை அருகே சரக்கு வாகனம் மோதி விபத்து: முதியவர் படுகாயம்

காவல் நிலையம்

வெள்ளியணை அருகே சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளனதில் முதியவர் படுகாயம் அடைந்தார்.

டூவீலர் மீது டாட்டா ஏஸ் வாகரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஜெகதாபி, பால்வார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் வயது 65. இவர் மே 2-ம் தேதி காலை 11- மணியளவில், கரூரிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.

இவரது வாகனம் வெள்ளியணை கருமாரியம்மன் மண்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, அதே சாலையில் வெள்ளியணை, தளியாப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி சென்ற tata ace வாகனம், பழனியப்பன் ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்த பழனியப்பனுக்கு, வலது கால், வலது கை, இடது தோள்பட்டை பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பழனியப்பன் அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,

இது தொடர்பாக டாட்டா ஏஸ் வாகனத்தை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சக்திவேல் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Read MoreRead Less
Next Story