பைக் மோதிய விபத்தில் காயமடைந்த மூதாட்டி பலி!

விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் பைக் மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த மூதாட்டி பலி. போலீசார் விசாரணை.
விராலிமலை வடக்கு ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஜெயா(72). கடந்த 18ம் தேதி விராலிமலை காமராஜர் நகர் பகுதியில் நடந்து சென்றபோது, அந்த வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார். விராலிமலை அரசு மருத் துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜெயா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து விரா லிமலை. போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story