அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு

அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழப்பு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூலப்பட்டி அருகே உள்ள வடுகநாதம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மொட்டையன் மனைவி அருக்காணி வயது 70. இவர் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5:30- மணிக்கு மேல் வடுகநாதம் பள்ளி பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார்.

குளிக்கச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் காலை நவம்பர் 8ஆம் தேதி 9:30 மணி அளவில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றுக்கு குளிக்க செல்லும் போது அருக்காணி நீரில் மூழ்கி உயிரிழந்தது போல் கிடந்தது கண்டு அவரது மகள் ஜெயசித்ராவுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்து தனது தாயார் உயிர் இழந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயசித்ரா,

இது குறித்து அரவக்குறிச்சி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த அருக்காணியின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக நவம்பர் 8ஆம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story