லால்குடி அருகே மன உளைச்சலில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

லால்குடி அருகே மன உளைச்சலில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

காவல் நிலையம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஊட்டத்தூரில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் 80 வயதான பாக்கியம். இவர் தனியாக வசித்து வந்துள்ளார்.மேலும் இவர் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்த மூதாட்டி பாக்கியம் மன உளைச்சல் அடைந்தார்.இந்நிலையில் நேற்று தனக்குத் தானே உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில் அவருக்கு 70 சதவீதம் தீக்காயம் ஏற்ப்பட்டது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டார் என கூறினர். பின்னர் இச்சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story