யானை துரத்தியதால் வாகன ஒட்டி தவறி விழுந்து காயம்

யானை துரத்தியதால் வாகன ஒட்டி தவறி விழுந்து காயம்

காயமடைந்த பெருமாள் 

கடம்பூர் அருகே யானை துரத்தியதில் பைக்கில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த வாகன ஓட்டியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டெருமை, மான், கழுதைபுலிகள் உட்பட பல வகையான வன விலங்குகள் உள்ளன. குறிப்பாக யானை, புலி, மான் நடமாட்டம் அதிகம். இவ்வனப்பகுதியில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் சாலையை கடந்து செல்வது வழக்கம். பலரை மிதித்து கொன்றுள்ளது. இந்திலையில் கடம்பூர் மலைப்பகுதி இருட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (40) இவர் பைக்கில் கரளையம் ரோட்டில் சென்ற போது யானை துரத்தியதில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் பெருமாள் படுகாயமடைந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் பெருமாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story