தஞ்சை அருகே சாலை விபத்தில் ஊழியர் பலி

தஞ்சை அருகே சாலை விபத்தில்  ஊழியர் பலி

கோப்பு படம்


திருச்சி அண்ணா நகர் துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் துரைராஜன் (வயது 39), இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கி தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் விடுமுறைக்காக துரைராஜன் திருச்சி வந்தார். தனது மனைவி சங்கீதாவுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை மாவட்டம் மெலட்டூருக்கு சென்றார். வந்த வேலை முடிந்த பின்னர் அங்கிருந்து திருச்சிக்கு அதே மோட்டார் சைக்கிளில் திரும்பிச் சென்றார்.

தஞ்சை அருகே அருள்மொழிப்பேட்டை - மாரியம்மன் கோவில் புறவழிச் சாலையில் மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்த போது எதிரே தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த மினிலாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட துரைராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி சங்கீதா பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துரைராஜ் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கண் முன்னே கணவர் பலியான சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story