விக்கிரவாண்டி அருகே தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு

விக்கிரவாண்டி அருகே தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு

தனியார் கம்பெனி ஊழியர் திடீர் சாவு

விக்கிரவாண்டி அருகே நெஞ்சுவலியால் தனியார் கம்பெனி ஊழியர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அருண்குமார்(வயது 25). விக்கிரவாண்டி குத்தாம்பூண்டி ரோட்டில் உள்ள மசாலா விற்பனை கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்த இவர் நேற்று இரவு திடீரென நெஞ்சுவலியால் துடித்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அருண்குமார் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story