மது போதையில் ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

மது போதையில்  ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

மது போதையில் ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

மது போதையில் குளித்த போது ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மது போதையில் குளித்தபோது கன்னங்குறிச்சி புது ஏரியில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார். கோரிமேடு அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது32). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு கன்னங்குறிச்சி புதுஏரியில் போதையில் குளித்துள்ளார். அப்போது அவர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடு்த்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜனார்த்தனனின் உடலை ஏரியில் இருந்து மீட்டனர். பின்னர் அவரது, உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story