பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

ராசிபுரம் பாரதிதாசன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பாரதிதாசன் சாலை-நகராட்சி நடுநிலை பள்ளியில் பள்ளி கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளி திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டது புதிதாக சேர்ந்த மாணவர்களையும் இப்பள்ளி மாணவர்களையும் பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர் கு.பாரதி வரவேற்றார் . இவ்வாண்டு புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி நுழைவாயில் இருந்து சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது . மேலும் அனைத்து மாணவ மாணவிகள் குழந்தைகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் ,நோட்டு புத்தகங்கள் கொடுக்கப்பட்டு பள்ளியின் அனைத்து மாணவர்களை கைத்தட்டி கரகோசத்துடன் வரவேற்பு வழங்கினர் .கல்வி அலுவலர் அருள்மணி அவர்கள் தலைமை வகித்தார். ஏராளமான ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story