நாட்டு வெடி தயாரிக்கும் பகுதியில் வெடி விபத்து

நாட்டு வெடி தயாரிக்கும் பகுதியில் வெடி விபத்து

தீ விபத்து

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கும் பகுதியில் வெடி விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகர் பகுதிக்கு உட்பட்ட கர்த்தநாதபுரம் செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் நாட்டு வெடி தயாரித்து வந்த மனோகர் என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அங்கிருந்த அருண் உள்ளிட்ட இருவர் படுகாயம் அடைந்தனர் .உடனடியாக அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய இருவரையும் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மன்னார்குடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story