ராசிபுரம் அருகே ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச் சென்ற போதை நபர்

ராசிபுரம் அருகே ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச் சென்ற போதை நபர்

ஆம்புலன்ஸ் திருடி சென்ற போதை ஆசாமி

ராசிபுரம் அருகே ஆம்புலன்ஸை திருடி ஓட்டிச் சென்ற போதை நபரை விரட்டி பிடித்து தர்ம அடி கொடுத்த நண்பர்கள்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சிவக்குமார், 25. இவர், கடந்த 5ம் தேதி இரவு பேளுக்குறிச்சி காவல் நிலையம் அருகே தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி இருந்தார். சிவக்குமார் அருகே உள்ள உணவகத்துக்கு சென்று உணவருந்த சென்றார்.

பின்னர் உணவருந்தி விட்டு வந்த சிவகுமார் தனது ஆம்புலன்ஸ் வாகனம் இல்லாதது தெரிந்து பதறினார். மேலும், இச்சம்பம் குறித்து பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிவக்குமார் தனது நண்பர்களுடன் CCTV காட்சி உதவியோடு ஆம்புலன்ஸ் வாகனத்தை பல்வேறு இடங்களில் தேடி வந்தார்.

இந்நிலையில், சிங்களாந்தபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த தனது ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்தி, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டிச் சென்றவரை பிடித்து தர்ம அடி கொடுத்து ஆம்புலன்ஸ் வாகனத்தை மீட்டனர். இச்சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில், ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி சென்றது, ராசிபுரம் அடுத்த பள்ளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த கோபி, 30 என்பவதும், மது போதையில் ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.

Tags

Next Story