அமமுக சார்பில் நடந்த பாஜக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் !

அமமுக சார்பில் நடந்த பாஜக வேட்பாளர் அறிமுகம் கூட்டம் !

 பாஜக வேட்பாளர் அறிமுகம் கூட்டம்

திருப்பூரில் அமமுக சார்பில் நடந்த பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் அமமுக சார்பில் நடந்த பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை தேர்தல் நடக்கும் 19ம் தேதி குழி தோண்டி புதைத்து விட வேண்டும் என்று பாஜக வேட்பாளர் முருகானந்தம் பேசினார். திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக நிர்வாகிகளிடையேயான பாஜக வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது அமமுக மாவட்ட செயலாளர், முன்னாள் மேயர் விசாலாட்சி தலைமையில் திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், திருப்பூர் தொகுதி வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் பேசுகையில், ‘தமிழகத்தை பொறுத்தவரை ஜிடிபி அதிகம் ஈட்டித்தரும் நகரம் திருப்புர். இங்கு உழைக்கும் மக்களுக்கு அவர்களுக்கான நலன்கள் வந்து சேரவில்லை. மாநில அரசாங்கம் அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கவில்லை, கம்யூனிஸ்ட் சித்தாந்ததை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிக்க வேண்டும் என்று தான் என்னை இந்த தேர்தலில் நிறுத்தி இருக்கிறார்கள். தேர்தல் நடக்கும் 19ம் தேதி கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை குழி தோண்டி புதைத்து விட வேண்டும் என்று பேசினார்.

Tags

Next Story