குருபெயர்ச்சி விழாவுக்கு பக்தர்களுக்கு அழைப்பு

குருபெயர்ச்சி விழாவுக்கு பக்தர்களுக்கு அழைப்பு

குரு பெயர்ச்சி விழா

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் மாலை 5:19 மணி அளவில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருப்பதால் மாலை 4:30 மணிக்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் நடராஜர் பூஜை சிறப்பாக நடைபெற உள்ளது.அதுசமயம் பக்தர்கள் கலந்து கொண்டு ஐயனின் திருவருளை பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மாலை 5:19 மணி அளவில் குரு பெயர்ச்சி யாகம் நடைபெற இருப்பதால் மாலை 4:30 மணிக்கே வந்திருந்து ரிஷபம்,மிதுனம் , சிம்மம், துலாம், தனுசு மற்றும் மீனம் ராசிக்காரர்கள் தங்களது பரிகாரத்துக்கான பலன்களை பெற்று செல்லும் வகையில் யாக பொருட்களை கொடுத்து பரிகார நிவர்த்தி செய்து கொள்ளவும் வேண்டப்படுகின்றார்கள்.

குரு பெயர்ச்சியால் நற்பலன்களை பெறும் ராசிகள் மேஷம்,கடகம்,கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் மாலை 7:00 மணிக்கு மேல் தேய்பிறை அஷ்டமி பூஜை அருள்மிகு யோக பைரவருக்கு நடைபெறவிருப்பதாலும் மேற்படி பூஜையிலும் கலந்து கொண்டு ஐயனின் திருவருளோடு அருட் பிரசாதம் பெற்று செல்லுமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags

Next Story