துறையூர் அருகே மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

துறையூர் அருகே மன உளைச்சலில் முதியவர் விஷம் குடித்து தற்கொலை

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மதுராபுரியில் மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் மனம் உடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மதுராபுரி கணேசபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் 67 வயதான சிதம்பரம். இவருடைய மனைவிக்கு உடல் நலம் சரியில்லாததால் முதியவர் சிதம்பரம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். பின்னர் இச்சம்பவம் குறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story