ஆண்டிபட்டி அருகே முதியவர் தற்கொலை!

ஆண்டிபட்டி அருகே முதியவர் தற்கொலை!

காவல் நிலையம் 

ஆண்டிபட்டி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சித்தயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 72. இவருக்கு வயது மூப்பின் காரணமாக சுகர், பிரஷர், வயிற்று வலி ஆகிய பிரச்சனைகள் இருந்து வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் குணமாகாததால் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார்.

நேற்று திடீரென அவர் தோட்டத்திற்கு சென்று பூச்சி மருந்து குடித்தார். க.விலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட அவர் நேற்று இரவு உயிரிழந்தார். ஆண்டிப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags

Next Story