அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் தலைநசுங்கி பலி

அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் தலைநசுங்கி பலி

பேருந்து சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி 

உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வடக்கு தெருவை சேர்ந்த கூலி தொழிலாளி ராஜமாணிக்கம் என்பவர் சைதாப்பேட்டையிலிருந்து கார்த்திகேயன் சாலை வழியாக தனது சைக்கிளில் சென்ஜோசப் பள்ளி அருகில் சென்ற போது ஏற்கனவே பல நாட்களாக மூடபடாத பள்ளத்தில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த போது போளுரில் இருந்து ஆரணி நோக்கி வந்த தடம் எண்17 அரசு பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த ஆரணி டவுள் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி ஆரணி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரியாக மூடப்படாத பள்ளத்தால் முதியவர் பேருந்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags

Next Story