தூத்துக்குடி அருகே குப்பைகளை எரித்தபோது தீப்பற்றி முதியவர் பலி

தூத்துக்குடி அருகே குப்பைகளை எரித்தபோது தீப்பற்றி முதியவர் பலி

கோப்பு படம் 

தூத்துக்குடி அருகே குப்பைகளை எரித்தபோது ஆடையில் தீப்பற்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி அருகே குப்பைகளை எரித்தபோது ஆடையில் தீப்பற்றி முதியவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், புளியம்பட்டி அருகே காசிலிங்கபுரம் மேல தெருவைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் சண்முகம் (79). இவர் நேற்று இரவு தனது வீட்டு முன்பு குப்பைகளை வைத்து தீ வைத்து எரித்தாராம்.

அப்போது திடீரென இவரது உடையில் தீப்பற்றி அவர் தீக்காயம் அடைந்தார். இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து புளியம்பட்டி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story