இறையான்குடியில் தேங்காயை எடுக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி

இறையான்குடியில் தேங்காயை எடுக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலி

காவல் நிலையம்

நாகை மாவட்டம் இறையான்குடியில் குளத்துக்கரையில் இருந்து தென்ன மரத்திலிருந்து குளத்தில் விழுந்த தேங்காயைஎடுக்கச் சென்ற முதியவர் நீரில் மூழ்கி பலியானர்.

நாகை மாவட்டம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா இறையான்குடி ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் முருகையன் ( 58). விவசாய கூலி தொழிலாளி. இவர் நடுத்தெருவில் உள்ள மன்னாங் குளத்தில் குளித்து கொண்டு இருந்த போது அந்த குளத்தை சுற்றி இருந்த தென்னை மரத்தில் இருந்து தேங்காய் குளத்தில் விழுந்து உள்ளது.

தேங்காயை எடுப்பதற்காக சென்ற போது முருகையன் குளத்தில் மூழ்கி உள்ளார். . இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் பாலமுருகன் கீழ்வேளூர் தீயணைப்பு துறை மற்றும் வலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதை எடுத்து கீழ்வேளூர் தீயணைப்பு படை குளத்தில் இறங்கி தேடிய போது குளத்தில் மூழ்கிய முருகையன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். போலீசார் இறந்த முருகையன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags

Next Story