40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

கிணற்றில் தவறி விழுந்த முதியவர்

சென்னை மதுரவாயல் நெசப்பாக்கம் அருகே 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பத்திரமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டார்.
சென்னை மதுரவாயல் நெசப்பாக்கம், பாரதியார் நகர் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் (75). வயது முதியவர் ஆன இவர் இன்று காலை இவர் வசிக்கக்கூடிய வீட்டின் அருகே உள்ள 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் கை, கால்கள் கழுவ வாளியில் நீர் இறைக்க முயன்ற போது கால் தவறி எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதனிடையே அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் போலீசார் மற்றும் விருகம்பாக்கம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் உயிருக்கு போராடிய முதியவரை கயிறு கட்டி இறங்கிய தீயணைப்பு வீரர்கள் அவரை பத்திரமாக கயிறு கட்டி மேலே தூக்கி மீட்டனர். மேலும் உயிருடன் மீட்கப்பட்ட முதியவருக்கு முதலுதவி செய்தனர். பெரிதாக காயம் ஏற்படாத நிலையில் முதியவருக்கு குடிக்க தண்ணீர், டீ வாங்கி கொடுத்தனர். கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பத்திரமாக தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story