டூவீலரில் சென்ற முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

டூவீலரில் சென்ற முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

வாகனம் மோதி விபத்து

டூவீலரில் சென்ற முதியவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
கரூர், ராயனூர் அருகே உள்ள தோரணக்கல்பட்டி, நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி வயது 75. இவர் பிப்ரவரி 22ஆம் தேதி மாலை நாலே கால் மணிக்கு, திண்டுக்கல் -கரூர் சாலையில், வெள்ளியணை அருகே உள்ள மல்லிகை தாபா அருகே தனது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, அதே சாலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள ஆர். கோம்பை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ஒட்டி வந்த அசோக் லேலண்ட் தோஸ்த் வாகனம், கிருஷ்ணசாமி ஓட்டி சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறி வாகனத்துடன் கீழே விழுந்த கிருஷ்ணசாமிக்கு தலை, கை, கால்கள் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த கிருஷ்ணசாமியின் மகன் செந்தில்குமார் வயது 42 என்பவர், இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று மேற்கொண்ட காவல்துறையினர், சரக்கு வாகனத்தை வேகமாகவும், அஜாகிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story