டூவீலரில் சென்ற முதியவர் மீது பயணிகள் ஆட்டோ மோதி விபத்து. முதியவர் படுகாயம்

டூவீலரில் சென்ற முதியவர் மீது பயணிகள் ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் முதியவர் மருத்துவமனையில் அனுமதி .
கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம் அருகே உள்ள முத்துநகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் வயது 60. இவர் பிப்ரவரி 16ஆம் தேதி இரவு 7:30 மணியளவில் அவருக்கு சொந்தமான டூவீலரில்,கரூர்- ஈரோடு சாலையில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் புன்னம்சத்திரம் கன்னம்பரப்பு அருகே சென்ற போது, எதிர்திசையில், அருகிலுள்ள பெரிய ரங்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவர் ஓட்டி வந்த பயணிகள் ஆட்டோ, ஐயப்பன் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த ஐயப்பனுக்கு, பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐயப்பன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பயணிகள் ஆட்டோவை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பவுல்ராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags

Next Story