சாலையை கடந்தவர் மீது கார் மோதியதில் முதியவர் பலி

சாலையை கடந்தவர் மீது கார் மோதியதில் முதியவர் பலி

குமாரபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  

குமாரபாளையம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விட்டலபுரியை சேர்ந்தவர் சோமசுந்தரம், 75. வாட்ச் மேன். இவர் சேலம், கோவை புறவழிச்சாலை, வட்டமலை பகுதியில், நேற்றுமுன்தினம் இரவு 08:30 மணியளவில் நடந்து சாலையை கடந்த போது, சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த பொலிரோ கார் ஒன்று, இவர் மீது மோதியதில், சம்பவ இடத்தில் பலத்த அடிபட்டு இறந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான, பொலிரோ கார் ஓட்டுனர், பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்த, கார் டிரைவர் சக்தி, 39, என்பவரை கைது செய்தனர்.

Tags

Next Story