டூவீலரில் வேகமாக சென்ற முதியவர் விபத்து

டூவீலரில் வேகமாக சென்ற முதியவர் கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்து விபத்துக்குள்ளானார்.
டூவீலரில் வேகமாக சென்ற முதியவர். கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்து விபத்து. கரூர் மாவட்டம், காக்காவாடி அருகே உள்ள ஊத்துக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் வயது 62. இவர் மே 2ம் தேதி மதியம் 3 மணியளவில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட, ஆத்து மேடு பகுதியில் இருந்து வெஞ்சமாங் கூடலூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெஞ்சமாங் கூடலூர், அருகே சோழியப்ப கவுண்டன் புதூர் பகுதியில் உள்ள சிதம்பரம் தோட்டம் அருகே சென்றபோது, டூவீலரில் வேகமாக சென்றதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தங்கவேலுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தங்கவேல் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags

Next Story