விஷப்பாம்பு கடித்து மூதாட்டி பலி

விஷப்பாம்பு கடித்து மூதாட்டி பலி

குரும்பூர் அருகே விஷப் பாம்பு கடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

குரும்பூர் அருகே விஷப் பாம்பு கடித்து மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் அருகேயுள்ள கானம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் மனைவி புஷ்பம் (66). இவர் நேற்று தனது வீட்டின் குளியலறைக்கு சென்றபோது அங்கு பதுங்கியிருந்த விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது. இதில் உடலில் விஷம் ஏறி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story