குடிசை வீட்டில் தீப்பற்றி எறிந்ததில் மூதாட்டி பலி

குடிசை வீட்டில் தீப்பற்றி எறிந்ததில் மூதாட்டி பலி

பைல் படம்

மதுராந்தகம் அருகே குடிசை வீடு தீப்பற்றி எறிந்ததில் மூதாட்டி உயிரிழந்த நிலையி, போலீஸ் விசாரணை நடக்கிறது.

மதுராந்தகம் அருகே குடிசை வீட்டில் தீப்பற்றி எறிந்ததில் மூதாட்டி பலி போலீசார் விசாரணை. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட வென்னாங்கப்பட்டு செல்லும் சாலையில் ஓரமாக வசித்து வந்த மூதாட்டி பூபதி என்பவர் வழக்கம்போல் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டில் உறங்கி உள்ளார்.

திடீரென்று நள்ளிரவில் மின் கசிவு காரணமாக கூரை வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அனைத்து உள்ளனர்..ஆனால் அதற்குள் முழுமையாக இருந்த கூரை வீடு அதில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பூபதி உடல் முழுவதும் தீயினால் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து வந்த சூனாம்பேடு காவல்துறையினர் பிரதேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Tags

Next Story