திருப்பத்தூரில் குளத்தில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலி
![திருப்பத்தூரில் குளத்தில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலி திருப்பத்தூரில் குளத்தில் குளிக்கச் சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி பலி](https://king24x7.com/h-upload/2024/07/02/569793-1000120918.webp)
சடலத்தை மீட்ட மீட்பு குழுவினர்
திருப்பத்தூர் சீதளி குளத்தில் பெண் ஒருவரின் உடல் மிதப்பதாக திருப்பத்தூர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலை அடுத்து விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை போராடி மீட்டனர். இதனையடுத்து போலீசார் விசாரணையில், இறந்தவர் சுமார் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி என்றும், இவர் திருப்பத்தூர் அச்சுகட்டை தெருவை சேர்ந்த சின்னகண்ணு என்பவரின் மனைவி சைத்துன் பீவி என்பதும் தெரியவந்தது.
இன்று காலை சீதளி குளத்தில், குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வழுக்கி குளத்திற்குள் விழுந்ததாக தெரியவந்த நிலையில் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குளிக்கச் சென்ற 80 வயது மூதாட்டி தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.