டூவீலர் மீது -ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்து

டூவீலர் மீது -ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்து

காவல்துறை 

பெண் ஓட்டிய டூவீலர் மீது, ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்து. பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
பெண் ஓட்டிய டூவீலர் மீது, ஆம்னி கார் நேருக்கு நேர் மோதி விபத்து. பெண் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மனைவி மங்கம்மா வயது 42. இவர் மார்ச் 20 ஆம் தேதி இரவு 8 மணி அளவில், மைலம்பட்டியில் இருந்து பாளையம் செல்லும் சாலையில் அவருக்கு சொந்தமான டிவிஎஸ் எக்ஸ்எல் 100- வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் பால்மடைபட்டி பிரிவு ரோடு அருகே வந்தபோது, எதிர் திசையில், கரூர் மாவட்டம், சிந்தாமணி பட்டி அருகே உள்ள கொள்ளுதண்ணி பட்டி பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் ஓட்டி வந்த மாருதி ஆம்னி கார், மங்கம்மா ஓட்டி வந்த டூவீலர் மீது, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மங்கம்மாவை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்கம்மாவின் உறவினர் அணைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணபதி வயது 36 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆம்னி காரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி,விபத்து ஏற்படுத்திய வேலுச்சாமி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர்.

Tags

Next Story