மழைநீர் வடிகால்வாயில் திறந்து கிடக்கும் மேன்ஹோல்

மழைநீர் வடிகால்வாயில் திறந்து கிடக்கும் மேன்ஹோல்

 திறந்து கிடக்கும் மேன்ஹோல்

செல்லம்மா நகர் பகுதியில் திறந்து கிடக்கும் கால்வாய் 'மேன்ஹோல்' மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, ஓரிக்கையில் சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில், செல்லம்மா நகர் அருகில், வடிகால்வாயின் மேன்ஹோல்' மீது போடப்பட்டு இருந்த சிமென்ட் சிலாப் மாயமாகியுள்ளது. இதனால், இப்பகுதியில் உலாவும் ஆடு, கன்றுக்குட்டி, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள், திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழுந்து விபத்தில் சிக்கி இறக்கின்றன. எனவே, திந்து கிடக்கும் கால்வாய், 'மேன்ஹோல்' மீது சிமென்ட் சிலாப் போட்டு மூட நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story