இரணியல் அருகே அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

இரணியல் அருகே அடையாளம் தெரியாத நபர் சடலமாக மீட்பு

 சடலம் 

இரணியல் அருகே அடையாளம் தெரியாத நபர்  சடலமாக மீட்பு . போலீசார் விசாரணை.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியில் அருகே தோட்டியோடு சந்திப்புலிருந்து திங்கள் நகர் செல்லும் சாலையில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சடலமாக கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக இரணியல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தனிஷ்லாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அதைத்தொடர்ந்து சடலமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சடலமாக கடந்தவர் நீல நிறத்தில் சட்டையும் கட்டம் போட்ட நீலக் கலர் லுங்கியும் அணிந்திருந்தார். அந்தப் பகுதியில் நேற்று மாலை போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து எந்த தகவல் தெரியவில்லை. அவர் எப்படி இறந்தார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story