அனகாபுத்துாரில் ரூ.1. 20 கோடியில் சுகாதார நிலையம்

அனகாபுத்துாரில் ரூ.1. 20 கோடியில் சுகாதார நிலையம்
கட்டிட பணிகள் துவக்கம் 
தாம்பரம் அருகே அனகாபுத்துர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 1. 20 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் துவங்கியுள்ளன.
தாம்பரம் மாநகராட்சி, அனகாபுத்துார் குளக்கரை தெருவில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. 1 மருத்துவர், 4 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இதன் பழைய கட்டடத்தை இடித்து, புதிதாக கட்ட கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1. 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டு, புதிய கட்டடத்திற்கான பணிகள் துவங்கியுள்ளன. இரண்டு மாடி கட்டடத்தில், 10 படுக்கை வசதி, ஆய்வகம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மூன்று மாதங்களில் இப்பணி முடிக்கப்படும். 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுகாதார நிலையம் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். தற்காலிகமாக, அருகே உள்ள வாடகை கட்டடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கிவருகிறது.

Tags

Next Story