பேராவூரணியின் கூவமான ஆனந்தவல்லி வாய்க்கால்

பேராவூரணியின் கூவமான ஆனந்தவல்லி வாய்க்கால்

ஆனந்தவள்ளி வாய்க்கால்

பேராவூரணி பாசன வாய்க்கால் கழிவு நீர் வாய்க்காலாக மாறி வருகிறது

பேராவூரணி ஆனந்தவல்லி வாய்க்காலில் கொட்டப்படும் நெகிழி குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. வாய்க்காலுக்குள் குப்பைகளை கொட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் ஆனந்தவல்லி என்னும் கல்லணைக் கால்வாய் கிளை வாய்க்கால், நகரின் மையத்தில் ஊருக்கு அழகு சேர்க்கும் வகையில் உள்ளது இந்த வாய்க்கால், ஆவணம் அருகே கல்லணைக் கால்வாயின் பிரதான வாய்க்காலில் இருந்து, கிளை வாய்க்காலாக பிரிந்து மாவடுகுறிச்சி, பொன்காடு, பேராவூரணி, செங்கொல்லை, நாட்டாணிக்கோட்டை வழியாக கொரட்டூர் ஏரியில் சென்று சேர்கிறது.

இந்த வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறுவதோடு, பேராவூரணி பெரியகுளம் ஏரிக்கு முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. மேலும் இப்பகுதி ஆழ்துளைக் கிணறுகளுக்கு ஜீவ ஊற்றாகவும் உள்ளது. கல்லணைக் கால்வாயில் தண்ணீர் திறக்கும் பொழுது, இந்த கிளை வாய்க்காலில் தண்ணீர் செல்லும். தற்போது மேட்டூரில் தண்ணீர் இல்லாததால், கல்லணை மூடப்பட்டதால்,

கிளை வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டு வாய்க்கால் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், பேராவூரணி நகர் பகுதியில் ஆங்காங்கே பிளாஸ்டிக் குப்பைகள் ஆனந்தவல்லி வாய்க்காலின் உள்புறத்தில் கொட்டப்பட்டு, சுற்றுச்சூழல் பாதிப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது. மேலும், சில பகுதிகளில் குடியிருப்போர் தங்கள் வீட்டுக் கழிவு நீரை குழாய் பதித்து ஆனந்தவல்லி வாய்க்காலில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் ஆனந்தவல்லி வாய்க்கால் கழிவுநீர் சாக்கடை வாய்க்காலாக மாறி வருகிறது. மே

லும், பல இடங்களில் ஷட்டர், துருசு சேதமடைந்தும், வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் உடைந்தும், பக்கவாட்டு சுவர், படிக்கட்டுகள் சேதம் அடைந்தும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் உரிய மராமத்துப் பணிகளை மேற்கொள்ளவும், ஆனந்தவல்லி வாய்க்காலில் குவிந்து கிடக்கும் நெகிழிக் கழிவுகளை அகற்றவும், அவ்வாறு நெகிழி,

குப்பைகளை கொட்டுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கவும், வாய்க்காலை பராமரிப்பு செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story