ஆனந்தவல்லி - சோமநாதர் கோவிலில் புதிய தேர் செய்யும் பணிகள் துவக்கம்

ஆனந்தவல்லி - சோமநாதர் கோவிலில் புதிய தேர் செய்யும் பணிகள் துவக்கம்

தேர் செய்யும் பணி

ஆனந்தவல்லி - சோமநாதர் கோவிலில் புதிய தேர் செய்யும் பணிகள் தொடங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஆனந்தவல்லி சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் புதிதாக பெரிய தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் தேருக்காக திருச்சி பெல் நிறுவனத்தில் இரும்பால் வடிவமைக்கப்பட்ட 3 அச்சுகள், 4 பெரிய சக்கரங்கள், 2 சிறிய சக்கரங்கள் கொண்டுவரப்பட்டன.

கனரகப் பொருள்கள் கையாளும் வாகனத்தின் மூலம் இந்த அச்சுகளில் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. பின்னா், அச்சுகளுக்கும் சக்கரங்களுக்கும் சிவாச்சாரியா்கள் சிறப்பு பூஜைகள் நடத்தினா்.

Tags

Next Story