அனந்தமங்கலம் ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தில் யாகசாலை பூஜைகள்

அனந்தமங்கலம்  ஸ்ரீஆஞ்சநேயர் ஆலயத்தில் யாகசாலை பூஜைகள்

யாகசாலை பூஜைகள் நடந்தன 

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அனந்தமங்கலம் ஸ்ரீஆஞ்சநேயர்ஆலய கும்பாபிஷேகம் 21ம்தேதி நடைபெறுவதை யொட்டி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா அனந்தமங்கலம் கிராமத்தில் பழைமை வாய்ந்த அருள்மிகு செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது.

இக்கோயிலில் ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் மூன்று கண்களையும், பத்துக் கரங்களையும், அந்தக் கரங்களில் எல்லாம் சங்கு, சக்கரம், வில், அம்பு, சூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தி, முதுகின் இருபக்கமும் கருடனுக்குரிய சிறகுகளோடு காட்சித் தருகிறார்.

இதுபோன்ற ஆஞ்சநேயர் திருமேனி உலகில் இங்கு மட்டுமே உள்ளது.ஆஞ்சநேயர், இலங்கையில் உள்ள அரக்கர்களை சம்ஹாரம் செய்து. திரும்பி வரும் வழியில் கடலோரம் இயற்கைச் சூழ்ந்த இடத்தில் இறங்கி ஆனந்தமாய் தங்கியிருந்த இடம்தான் இந்தத் தலம் என்றும், அதனாலேயே இது ஆனந்தமங்கலம் என்று அழைக்கப்பட்டு, தற்போது மறுவி அனந்தமங்கலம் என்று அழைக்கப்படுகிறது என்பது தலவரலாறு.

எனவே, இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.இத்தகைய சிறப்பு மிக்க இவ்வாலயத்தில் கும்பாபிஷேகம் செய்வதற்காக திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வருகின்ற 21ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

அதற்காக யாகசாலைகள் அமைக்கப்பட்டு யாகசாலையின் முன்பு ராமன், லட்சுமணன், சீதை,திரிநேத்ர தசபுஜ வீரஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளை எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடன்கள் வைக்கப்பட்டு சாஸ்தான பூஜைகள் அக்னி பிரதிஷ்டை ஹோமம் செய்யப்பட்டு பூர்ணஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story