அன்பில் மாரியம்மன் கோயில் பூச்சோரிதல் விழா

அன்பில் மாரியம்மன் கோயில் பூச்சோரிதல் விழா

பூச்சொரிதல் விழா

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நேற்று நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலின் உபகோயிலாகும். சமயபுரம் மாரியம்மனின் தங்கையாக விளங்கும் இக்கோயிலில் நடைபெற்ற பூச்சொரிதல் விழாவையொட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து கோயில் பணியாளா்கள், கிராம மக்கள் பூக்களை கூடையில் ஏந்தி, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக கோயிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனா்.பூச்சொரிதல் விழாவையொட்டி உலக மக்களின் நன்மைக்காக அம்மனின் பச்சைப்பட்டினி விரதம் தொடங்கியது.மேலும் அன்பில் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலிருந்து திரளான பக்தா்கள் பூக்களை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு சென்று அம்மனுக்கு சாற்றி வழிபட்டனா். இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் இணை ஆணையா் தலைமையில் கோயில் குருக்கள், பணியாளா்கள் செய்தனா்.

Tags

Next Story