தாய்க்காக வாக்கு சேகரித்த அன்புமணி மகள்

தாய்க்காக வாக்கு சேகரித்த அன்புமணி மகள்

வாக்கு சேகரித்த அன்புமணி மகள்

தர்மபுரி தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு அவரது மகள் வாக்கு சேகரித்தார்.

தர்மபுரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் அவரது மகளும் ஈடுபட்டு வருகின்றார்.

இன்று மாலை தர்மபுரி முக்கிய பகுதியான மதிகோன்பாளையம்,கோட்டை கோயில், சந்தைப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தர்மபுரி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொது மக்களிடம் ,

துண்டு பிரசுரங்களை கொடுத்து தனது தாய்க்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார். பின்னர் குடியிருப்பு பகுதிகளில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதே பகுதியில் வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்த மூதாட்டியிடம் அருகில் அமர்ந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு பாமகவிற்காக தர்மபுரியில் போட்டியிடும் தனது தாய் சௌமியா அன்புமணிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கவும் ,

வாக்களிக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை உட்பட அனைத்து பிரச்சனைகளையும் தனது தாய் வெற்றி பெற்றால் நிவர்த்தி செய்து தருவார் என்றும் அதனால் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags

Next Story