ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

குமாரபாளையத்தில் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ வைபவம் நடந்தது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவ விழாவில், சொர்க்கவாசல் திறப்பு, துவாதசி விரத பூஜை, அனுமன் ஜெயந்தி விழா, கூடாரவல்லி சிறப்பு பூஜை உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. இதன் ஒரு கட்டமாக நேற்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று ராமர் கோவிலில் திருப்பாவை பாராயணம் மற்றும் பஜனை நடைபெறவுள்ளது.

Tags

Next Story