அந்தியூர் : திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

அந்தியூர் : திட்டப்பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

அந்தியூர் ஊராட்சிப் பகுதிகளில் ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

வேம்பத்தி ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ், ரூ.45.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய கூடத்தினையும், கருமாண்டாம்பாளையம் ஊராட்சியில், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், ரூ.54.75 இலட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார நிலைய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணியிளையும்.

அத்தாணி பேரூராட்சி, செம்புளிச்சாம்பாளையம் பகுதியில், பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தினர் கீழ், ரூ.11.92 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி கட்டிடங்கள் மற்றும் கழிப்பறை கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு வரும் பணிகள் என அந்தியூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பொத்தம் ரூ.4.31 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags

Next Story