சிவசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அங்காளம்மன்

சிவசக்தி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அங்காளம்மன்

அங்காளம்மன் 

வடவெட்டி அங்காளம்மன் கோயிலில் கார்த்திகை மாத அமாவாசை முன்னிட்டு காலையில் கோபால விநாயகர் ,பெரியாழி, முத்துமாரியம்மன் நவகிரகங்கள் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்க, பூச்சிகள் தாக்கம் குறைய மக்கள் நோய் தொற்றிலிருந்து காக்க வேண்டி ஆலய வளாகத்தில் சிவராமன் சிவாச்சாரியார் சிறப்பு யாகம் செய்தார்.மாலை ஆலய வளாகத்தில் அங்காளம்மன் அலங்கார ரூபத்தில் ஊஞ்சல் தாலாட்டு மண்டபத்தில் அமர்த்தப்பட்டு தாரை தப்பட்டை ,பம்பை உடுக்கை மேல தாளங்கள் முழங்க சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து திரளானபக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என சரண கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர் . விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் புண்ணியமூர்த்தி, மற்றும் விழா குழுவினர், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story