அபாயகரமான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்

அபாயகரமான நிலையில் உள்ள அங்கன்வாடி கட்டிடம்

செங்கல்பட்டில் அங்கன்வாடி கட்டிடம் ஒன்று அபாயகரமான நிலையில் உள்ளது.


செங்கல்பட்டில் அங்கன்வாடி கட்டிடம் ஒன்று அபாயகரமான நிலையில் உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம்,காட்டாங்கொளத்துார் அடுத்த சிங்கபெருமாள் கோவில் முத்துமாரியம்மன் கோவில் தெருவில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பயில, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில், 25க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த கட்டடம் கட்டப்பட்டு, 20 ஆண்டுகளை கடந்ததால் சுவர்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, அபாயகரமான நிலையில் உள்ளது.

Tags

Next Story