அங்கன்வாடி மைய கட்டிடம் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

அங்கன்வாடி மைய கட்டிடம் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

கருமந்துறை சூளாங்குறிச்சி பகுதியில் ரூ.18 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்

கருமந்துறை சூளாங்குறிச்சி பகுதியில் ரூ.18 லட்சத்தில், அங்கன்வாடி மைய கட்டிடம் ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
சேலம் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட கருமந்துறை சூளாங்குறிச்சி பகுதியில் ஆத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.18 லட்சத்தை அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதை தொடா்ந்து திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில், ஆத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜெய்சங்கரன் கலந்து கொண்டு அங்கன்வாடி கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள மாணவ, மாணவிகளுக்கு அவர் இனிப்பு வழங்கினார். இதில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னத்தம்பி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மோகன், மாவட்ட கவுன்சிலர் தங்கமணி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் குருசாமி, ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் கருத்திருமன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story