அங்கன்வாடி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

அங்கன்வாடி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

செயின்் பறிப்பு

குடியாத்தம் பகுதியில் அங்கன்வாடி ஆசிரியையிடம் டூவீலரில் வந்த இருவர் தங்க செயினை பறித்து சென்றது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் காட்பாடி ரோடு காந்திநகர் அருகே ஸ்வஸ்திக் நகரை சேர்ந்தவர் விவசாயி முரளிபாபு. இவரது மனைவி ஜீவிதா (37). கொட்டமிட்டா கிராமத்தில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே மரம் வெட்டியது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீடு திரும்பினார்.

வீட்டின் அருகே வந்தபோது எதிரே 2 பேர் ஹெல்மெட் அணிந்தபடி மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து ஜீவிதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த டி.எஸ்பி ரவிச்சந்திரன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்த சாரதி, பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்ஆதி, தனிப்பிரிவு ஏட்டு ஹரிதாஸ் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story