அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில், வருவாய் கிராம உதவியாளருக்கு ஓய்வூதியம் ரூ 6750 வழங்குவது போல் சத்துணவு- அங்கன்வாடி ஓய்வதியர்களுக்கும். தமிழக அரசு வழங்க வேண்டும், அரசுத்துறை காலிப்பணியிடங்களில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களையும் சேர்த்து அவர்களுக்குமுறையான காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும்,

மேலும் தமிழகம் முழுவதும் காலை சிற்றுண்டி திட்ட அமலாக்கத்தை சத்துணவு ஊழியர்களிடம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 300க்கும் மேற்பட்டோர் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மேற்கு காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்

Tags

Next Story