அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த மாவட்ட ஆட்சியர் உத்திரவிட்டு ஒரு சில மையங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும் பணியும் முடிந்துள்ளது என்றும், இது சம்மந்தமாக அங்கன்வாடி பணியாளர்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தினர்.

இதைக் கண்டித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் சில பேருக்கு பணிமாறுதல் வழங்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கடந்த சில தினங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .நேற்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனை முன்னிட்டு இன்று தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு அடிப்படை வசதிள் செய்து தரமறுத்த மாவட்ட ஆட்சியர் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.அப்பொழுது காவல்துறைக்கும் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.பின்னர் காவல்துறையினருடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story