கை நீட்டி பேசியதால் ஆத்திரம்: விரலை கடித்து துப்பியவரால் பரபரப்பு

கை நீட்டி பேசியதால் ஆத்திரம்: விரலை கடித்து துப்பியவரால் பரபரப்பு

மருத்துவ கல்லூரி மருத்துவமனை 

சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (29), பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு பேளூர் பிரிவுரோடு பகுதியில் கடை ஒன்றில் சிக்கன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அங்கு வந்த மேட்டுடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவருக்கும், ரமேசுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது கைநீட்டி பேசிய ரமேசின் ஆள்காட்டி விரலை திடீரென கிருஷ்ணசாமி கடித்து துப்பினார். அலறிய ரமேசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரமேசுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் கிருஷ்ணசாமியை கைது செய்து விசாரதணை நடத்தினர்.

Tags

Next Story