அஞ்சூரம்மன் ஆலய திருத்தேர் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அஞ்சூரம்மன் ஆலய திருத்தேர் விழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் கிராமத்தில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அஞ்சூரம்மன் திருக்கோவில் வைகாசி மாதம் ரத உற்சவம் கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது.இந்த விழாவையொட்டி ஸ்ரீ அஞ்சூரம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஞ்சூரம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட தேரானது சோத்துப்பாக்கம் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வளம் வந்தது.

பின்னர் சென்னை திருச்சி தேசியநெடுஞ்சாலையில் நிறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் தேங்காய் பழம் பூ மாலை அடங்கிய நூற்றுக்கு மேற்பட்ட சீர் வரிசை தட்டுகள் வைத்து சாமி தரிசனம் செய்தனர். தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட தேரானது ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags

Next Story