அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

அண்ணா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவிப்பு

அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு

சேலம் அதிமுகவினர் சார்பில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு இருந்து மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாசலம் தலைமையில் நிர்வாகிகள் அண்ணா சிலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதைத்தொடர்ந்து ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பன்னீர்செல்வம், பாலசுப்பிரமணியம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், சக்திவேல், பொருளாளர் பங்க் வெங்காடசலம், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம், முருகன், சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story