அண்ணா நினைவு நாள் - நாகர்கோவிலில் திமுக அமைதி பேரணி

அண்ணா நினைவு நாள் -  நாகர்கோவிலில்  திமுக அமைதி பேரணி
நாகர்கோவில் அண்ணா சிலைக்கு ஊர்வலமாக சென்ற அமைச்சர்
பேரறிஞர் அண்ணாவின் 55 ஆவது நினைவு நாளை முன்னிட்டு நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்ட திமுகவினர் பேரணியாக சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணா நினைவு தினத்தை ஒட்டி குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரில் உள்ள அவரது உருவ சிலைக்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகள் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திமுக சார்பில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமையில், மேற்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான மனோ தங்கராஜ் முன்னிலையில் மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலம் வடசேரியில் உள்ள அண்ணா சிலைக்கு வந்தது. இந்த ஊர்வலத்தில் பெரும்பாலான திமுகவினர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். பின்னர் அங்கு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் எப் எம் ராஜரத்தினம், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகரச் செயலாளர் ஆனந்த் உட்பட ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story